• Sep 20 2024

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு! samugammedia

Tamil nila / May 17th 2023, 7:35 pm
image

Advertisement

2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்டு நாடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபியில் இன்று மதியம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.


இதன்பொழுது உயிர் நீத்த உறவுகளிற்கு ஈகைச்சுடரேற்றி அக வணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.




தொடர்ச்சியாக நாளைய தினம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற் இருக்கின்ற இறுதி நாள் நினைவேந்தலில் தாயக உறவுகள் அனைவரும் கலந்து சர்வதேசத்திற்கு இடம்பெற்ற இனப்படுகொலையினை ஊடுகடத்தவும் ஆத்மார்த்தமான அஞ்சலிகளை செலுத்தவும் வருகை தருமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைத்துநிற்கின்றது.


மேலும் நாளை மாலை 2:30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக இனப்படுகொலை தூபியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்படவுள்ள நிலையில் குறித்த நினைவேந்தலிலும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைத்து நிற்கின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு samugammedia 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்டு நாடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபியில் இன்று மதியம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.இதன்பொழுது உயிர் நீத்த உறவுகளிற்கு ஈகைச்சுடரேற்றி அக வணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.தொடர்ச்சியாக நாளைய தினம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற் இருக்கின்ற இறுதி நாள் நினைவேந்தலில் தாயக உறவுகள் அனைவரும் கலந்து சர்வதேசத்திற்கு இடம்பெற்ற இனப்படுகொலையினை ஊடுகடத்தவும் ஆத்மார்த்தமான அஞ்சலிகளை செலுத்தவும் வருகை தருமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைத்துநிற்கின்றது.மேலும் நாளை மாலை 2:30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக இனப்படுகொலை தூபியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்படவுள்ள நிலையில் குறித்த நினைவேந்தலிலும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைத்து நிற்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement