இந்திய மீனவர்களின் தாக்குதல்கள் காரணமாக வடக்கு மீனவர்களுக்கும் தமிழக உறவுகளுக்கும் இடையில் பாரிய பிளவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் இந்திய துணை தூதுவராலயத்திற்கு இந்தி மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை தொடர்பான மகஜர் ஒன்று இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக காரைநகர் கற்கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடிபடகுகளின் மீன்பிடி காரணமாக காரைநகர் மீனவர்கள் மூவருக்கு சுமார் 11லட்சம் நட்டஈடு ஏற்பட்டுள்ளது.
அதிகளவான மீன்களை பிடிக்க கூடிய குறித்த காலப்பகுகுயில் இவ்வாறான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் எமது பிரதேச மீனவர்களை வெகுவாக பாதிக்கின்றது.
எனவே இதற்கு இந்திய துணை தூதுவராலயம் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மீனவர்களின் தாக்குதல் தமிழக உறவில் விரிசலை ஏற்படுத்தும்-காரை பிரதேச சபையின் தவிசாளர் மகஜர்SamugamMedia இந்திய மீனவர்களின் தாக்குதல்கள் காரணமாக வடக்கு மீனவர்களுக்கும் தமிழக உறவுகளுக்கும் இடையில் பாரிய பிளவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.யாழ் இந்திய துணை தூதுவராலயத்திற்கு இந்தி மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை தொடர்பான மகஜர் ஒன்று இன்று கையளிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டு வாரங்களாக காரைநகர் கற்கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடிபடகுகளின் மீன்பிடி காரணமாக காரைநகர் மீனவர்கள் மூவருக்கு சுமார் 11லட்சம் நட்டஈடு ஏற்பட்டுள்ளது. அதிகளவான மீன்களை பிடிக்க கூடிய குறித்த காலப்பகுகுயில் இவ்வாறான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் எமது பிரதேச மீனவர்களை வெகுவாக பாதிக்கின்றது.எனவே இதற்கு இந்திய துணை தூதுவராலயம் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.