கிளிநொச்சி மாவட்ட செயலகம், காவேரி கலா மன்றம், தமிழியல் ஆய்வு நடுவம்
மற்றும் மாவட்ட பண்பாட்டு பேரவை இணைந்து நடத்தும் சமகால இலக்கிய முயற்சிகள்
ஆய்வரங்கம் நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி
நிலையம் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில்
23.05.2023 இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.
2009 ஆண்டுக்கு
பின்னரான கிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படையாகக் கொண்ட கருணாகரன்
படைப்புகள், தமிழ்க்கவியின் படைப்புகள், யோகவாவின் படைப்புகள்,
தீபச்செல்வன் படைப்புகள் மற்றும் ஏழுமலை பிள்ளையின் படைப்புகள் ஆகிய ஐந்து
சமகால இலக்கியம் மற்றும் அரசியல் புத்தகங்கள் தொடர்பான ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்க விடயம்.
இன் நிகழ்வில்
கிளிநொச்சி தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் கி.கமலராஜன், வடக்கு வலய
கல்விப்பணிப்பாளர் அ.சிவனருள்ராஜா, தமிழியல் ஆய்வு நடுவத்தின் நிறைவேற்று
பணிப்பாளர் ந.தமிழழகன் மற்றும் கவிஞர் ராஜீவன் ஆகியோர்கள் இந்நிகழ்வில்
கலந்து கொண்டனர்.