உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தற்போது தேர்தலை நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது என வழக்குத் தாக்கல் செய்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் நீதிமன்றில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளதாகலும், இது மூன்று நீதிபதிகளின் ஏகோபித்த தீர்மானம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை தடுக்கும் வகையில் செயற்படும் சகலருக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தலை தடுக்க முற்பட்ட அனைவருக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - லக்ஸ்மன் கிரியெல்ல உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தற்போது தேர்தலை நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது என வழக்குத் தாக்கல் செய்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இது தொடர்பில் நீதிமன்றில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளதாகலும், இது மூன்று நீதிபதிகளின் ஏகோபித்த தீர்மானம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.தேர்தலை தடுக்கும் வகையில் செயற்படும் சகலருக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.