கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியுள்ளது.
அமெரிக்க படைகளுடன் இணைந்து தென் கொரியா போர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றது.
இன்று வட கொரிய-தென் கொரிய எல்லைக்கு அருகே மிகப்பெரிய அளவில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.