தமிழகத்தில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உளுந்தார்பேட்டை அருகே உள்ள வடமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் 25 வயதான சுந்தரேசன் என்பவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சுந்தரேசன் சொந்த ஊருக்கு வந்த பின்னர் தந்தையிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறி பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த சுந்தரேசன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.