முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் பணியிடத்தில் உயிரிழந்த குழந்தையின் தாத்தாவை பிணையில் விடுவிக்க புதுக்கடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரை தலா 3 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அனர்த்தம் இடம்பெறும் போது, குழந்தை தாத்தாவின் பாதுகாப்பில் இருந்த நிலையில், குழந்தைக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டில் நேற்று (10) இரவு முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 65 வயதுடைய நபரை இன்று (11) புதுக்கடை இலக்கம் 06 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லேரியா சிறுவனின் தாத்தாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு. samugammedia முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் பணியிடத்தில் உயிரிழந்த குழந்தையின் தாத்தாவை பிணையில் விடுவிக்க புதுக்கடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி, சந்தேகநபரை தலா 3 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அனர்த்தம் இடம்பெறும் போது, குழந்தை தாத்தாவின் பாதுகாப்பில் இருந்த நிலையில், குழந்தைக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டில் நேற்று (10) இரவு முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட 65 வயதுடைய நபரை இன்று (11) புதுக்கடை இலக்கம் 06 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.