சிங்கள மக்களே தங்களுடைய தலைவர்களால் கொண்டாடப்படுகின்ற சுதந்திர தினக் கொண்டாடங்களை புறக்கணித்துள்ள நிலையில் இன்று அதை பார்த்து சர்வதேச சிரிக்கும் என்பதை ரணில் விக்கிரமசிங்க விரைவில் விளங்கிக்கொள்வார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக கருப்புக்கொடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
குறிப்பாக சிங்கள மக்களே தங்களின் தலைவர்களால் ஏமாறுவதற்கு தயாரில்லை என்ற நிலைக்கு வந்துள்ள நிலையில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முட்டாள் தமிழ் தலைவர்கள் அதனை விளங்கிக்கொள்ளாமல் நிபந்தனை இல்லாத ஆதரவை கொடுத்து நிராகரிக்கப்படுகின்ற தரப்புக்களுக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்துள்ளதாக கஜேந்திரகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்
தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முட்டாள்களே தற்போதைய தமிழ் தலைவர்கள்:கஜேந்திரகுமார் சாட்டை சிங்கள மக்களே தங்களுடைய தலைவர்களால் கொண்டாடப்படுகின்ற சுதந்திர தினக் கொண்டாடங்களை புறக்கணித்துள்ள நிலையில் இன்று அதை பார்த்து சர்வதேச சிரிக்கும் என்பதை ரணில் விக்கிரமசிங்க விரைவில் விளங்கிக்கொள்வார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக கருப்புக்கொடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.குறிப்பாக சிங்கள மக்களே தங்களின் தலைவர்களால் ஏமாறுவதற்கு தயாரில்லை என்ற நிலைக்கு வந்துள்ள நிலையில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முட்டாள் தமிழ் தலைவர்கள் அதனை விளங்கிக்கொள்ளாமல் நிபந்தனை இல்லாத ஆதரவை கொடுத்து நிராகரிக்கப்படுகின்ற தரப்புக்களுக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்துள்ளதாக கஜேந்திரகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்