மஹவயிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று கொள்ளுப்பிட்டி பகுதியில் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த அனர்த்தம் இன்று (27) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக கரையோரப் பாதையில் ஒரு பாதையில் மாத்திரம் புகையிரதம் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில் தடம் புரண்டதன் காரணமாக புகையிரத பாதை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகையிரதத்தை தடம் புரளும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.