ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நீதி கோரி புத்தளம் அன்னை ஷாந்த மரியா தேவாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் அருட்தந்தை, ஆயர்கள்,அருட்சகோதரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த குண்டு தாக்குதலில் உயிர் நீர்த்தவர்களுக்காக திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது. அத்துடன் ஆத்மா சாந்தி பிரார்தனைகளும் இடம்பெற்றன.