உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு கோரி புத்தளம் நாகவில்லு ஜும் ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த
ஆர்ப்பாட்டம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் போராளிகள் மற்றும்
வேட்பாளர்கள் மற்றும் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தேர்தலை வைக்குமாறு கோரி கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்திவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது
தமது ஊரிலிருந்து தேர்தலுக்கான பணத்தை சேகரித்து தருவதாக
ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறி பணத்தை சேகரித்தமையையும் காணக்கூடியதாக
இருந்தது.