பொதுநலவாய செயலாளர் நாயகம் Rt Hon Patricia Scotland KC அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து நாட்டின் 75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக பொதுநலவாய செயலகம் அறிவித்துள்ளது.
பெட்ரிசியா ஸ்காட்லாந்து பெப்ரவரி 1 ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு வந்து 2023 பெப்ரவரி 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புறப்படுவார் என பொதுநலவாய செயலகம் அறிக்கையொன்றை வெளியிட்டது.
பெப்ரவரி 4 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் குறிப்பிடத்தக்க ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வுகளைக் கொண்டாடுவதற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் செயலாளர் நாயகம் அழைக்கப்பட்டுள்ளார்.
நாட்டிற்கான ஐந்து நாள் பயணத்தில், அவர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து, பெப்ரவரி 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை, புவிசார் அரசியல் வரைபடவியலாளரான ஓஷன் சிந்தனைக் கூடத்தில் விரிவுரை ஆற்றுவார்.
மேலும் அவர் தனது விஜயத்தை முடித்துக்கொண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி நாட்டை விட்டு செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.