• Apr 27 2024

மின்சாரத்தை உருவாக்கும் அதிசய மீன் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Chithra / Dec 1st 2022, 3:58 pm
image

Advertisement

மீன்களில் வித்தியாசமானது 'ஈல்' என்னும் விலாங்கு மீன். இது தன்னை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள அவற்றின் மீது மின்சாரத்தையே பாய்ச்சும் திறனுடையது.

உடல் பாம்பைப் போன்று உருளையாகவும் செவுள்கள் இல்லாமலும் இருக்கும்.

தென் அமெரிக்காவின் அமேசான் ஆறுகளின் கிளை நதிகளில் வாழக்கூடிய வியப்பளிக்கும் இந்த மீன், தன் எதிரியின் உடலில் பட்டதும் மின்சாரத்தை அவற்றின் மீது பாய்ச்சி அவற்றை கொல்கின்றன.


ஈல் மீன்கள் ஆற்று நன்னீரில் வாழக்கூடியவை. இருப்பினும் இவை குஞ்சு பொறிக்க கடலின் உப்பு நீரை நோக்கிச் செல்கின்றன.

ஈல் மீனின் உள் உறுப்புகள் அனைத்தும் அதன் உடலின் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ளன.

இவை மிகச் சிறிய அளவு செவுள் அமைப்பு கொண்டவை. சுவாசித்தப் பின் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்ற மட்டுமே இவை செவுள்களைப் பயன்படுத்துகின்றன. மற்ற மீன்களைப் போல செவுள்கள் மூலம் மட்டும் இவை சுவாசிப்பதில்லை.     

ஈல் மீன்களின் உடலில் இரண்டு வித்தியாசமான மின்சாரம் உற்பத்தி செய்யும் உறுப்புகள் உள்ளன. இவை குறிப்பிட்ட தூரத்திற்கு மின்சாரத்தைப் பாய்ச்சியும் தன் இரையைக் கொல்லும்.

மின்சாரத்தை உருவாக்கும் அதிசய மீன் பற்றி உங்களுக்கு தெரியுமா மீன்களில் வித்தியாசமானது 'ஈல்' என்னும் விலாங்கு மீன். இது தன்னை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள அவற்றின் மீது மின்சாரத்தையே பாய்ச்சும் திறனுடையது.உடல் பாம்பைப் போன்று உருளையாகவும் செவுள்கள் இல்லாமலும் இருக்கும்.தென் அமெரிக்காவின் அமேசான் ஆறுகளின் கிளை நதிகளில் வாழக்கூடிய வியப்பளிக்கும் இந்த மீன், தன் எதிரியின் உடலில் பட்டதும் மின்சாரத்தை அவற்றின் மீது பாய்ச்சி அவற்றை கொல்கின்றன.ஈல் மீன்கள் ஆற்று நன்னீரில் வாழக்கூடியவை. இருப்பினும் இவை குஞ்சு பொறிக்க கடலின் உப்பு நீரை நோக்கிச் செல்கின்றன.ஈல் மீனின் உள் உறுப்புகள் அனைத்தும் அதன் உடலின் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ளன.இவை மிகச் சிறிய அளவு செவுள் அமைப்பு கொண்டவை. சுவாசித்தப் பின் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்ற மட்டுமே இவை செவுள்களைப் பயன்படுத்துகின்றன. மற்ற மீன்களைப் போல செவுள்கள் மூலம் மட்டும் இவை சுவாசிப்பதில்லை.     ஈல் மீன்களின் உடலில் இரண்டு வித்தியாசமான மின்சாரம் உற்பத்தி செய்யும் உறுப்புகள் உள்ளன. இவை குறிப்பிட்ட தூரத்திற்கு மின்சாரத்தைப் பாய்ச்சியும் தன் இரையைக் கொல்லும்.

Advertisement

Advertisement

Advertisement