உபெர்ட் ஏஞ்சல் என்ற சிம்பாப்வே போதகர் சர்வதேச தங்கம் கடத்தல் மற்றும் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
இவர் தற்போது இலங்கையில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் ஆசிரியரும் ஆன்மீக குருவும் ஆவார்.
சர்வதேச தங்கம் கடத்தல் மற்றும் பணமோசடியில் ஈடுபடும் இவர் சிம்பாப்வே அரசின் சிறப்பு தூதராக பணியாற்றி வருவதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
உபெர்ட் ஏஞ்சல் 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு விஜயம் செய்து, மார்ச் 19 ஆம் திகதி கட்டுநாயக்க மிராக்கிள் டோமில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுடன் கூட்டு பிரார்த்தனையை நடத்தியுள்ளார்.