திருகோணமலை
, தோப்பூர் -கூர்கண்டம் பகுதியில் தனியார் ஒருவரினால் மதுபான சாலை
அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் மதுபான சாலைக்கான
அனுமதியை வழங்க வேண்டாமென தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை (08) அமைதியான
முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தோப்பூர்
-கூர்கண்டம் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகையை தொடர்ந்து சுலோகங்களை
ஏந்தியவாறு நடைபவணியாக வந்து திருகோணமலை -மட்டக்களப்பு வீதியில் இவ்
கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
தோப்பூர் -கூர்கண்டம் பகுதியில்
மதுபானசாலை அமையப் பெறுமாக இருந்தால் பல்வேறு சமூக சீர்கேடுகளும்,
பிரச்சினைகளும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.அதனால்
இப்பிரதேசத்தில் மதுபானசாலை அமைவதற்கு தாம் எதிர்ப்பினை வெளியிடுவதாக
கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இது விடயத்தில்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தோப்பூர் - கூர்கண்டம்
பகுதியில் மதுபானசாலை திறப்பதனை தடுப்பதற்கு முன்வர வேண்டுமெனவும் மக்கள்
கோரிக்கை விடுத்தனர்.
எதிர்கால சந்ததியை அழிக்காதே.திருமலையில் மதுக்கடைக்கு எதிர்ப்பு. வீதியில் இறங்கிய மக்கள்.samugammedia திருகோணமலை
, தோப்பூர் -கூர்கண்டம் பகுதியில் தனியார் ஒருவரினால் மதுபான சாலை
அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் மதுபான சாலைக்கான
அனுமதியை வழங்க வேண்டாமென தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை (08) அமைதியான
முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.தோப்பூர்
-கூர்கண்டம் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகையை தொடர்ந்து சுலோகங்களை
ஏந்தியவாறு நடைபவணியாக வந்து திருகோணமலை -மட்டக்களப்பு வீதியில் இவ்
கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.தோப்பூர் -கூர்கண்டம் பகுதியில்
மதுபானசாலை அமையப் பெறுமாக இருந்தால் பல்வேறு சமூக சீர்கேடுகளும்,
பிரச்சினைகளும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.அதனால்
இப்பிரதேசத்தில் மதுபானசாலை அமைவதற்கு தாம் எதிர்ப்பினை வெளியிடுவதாக
கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.இது விடயத்தில்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தோப்பூர் - கூர்கண்டம்
பகுதியில் மதுபானசாலை திறப்பதனை தடுப்பதற்கு முன்வர வேண்டுமெனவும் மக்கள்
கோரிக்கை விடுத்தனர்.