மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு ஐந்து லட்சம் அபராதம் விதிக்கப்படும் என வெளியான தகவல்கள் குறித்து பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
இலங்கையில் மது போதையில் வாகனம் செலுத்துவோருக்கு ஐந்து லட்சம் ரூபா அபராதமோ அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையோ விதிக்கப்படும் என சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
குறிப்பாக நேற்று முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக தகவல்கள் பகிரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த தகவல் போலியானது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும் இவ்வாறு போலியான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களின் பிரகாரம் குடிபோதையில் வாகனம் செலுத்துவொருக்கு 25000 ரூபா முதல் 30000 ரூபா வரையிலான அபராதமும் ஓட்டுனர் உரிமத்தை 2 அல்லது மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம் பொலிஸாரின் விளக்கம் மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு ஐந்து லட்சம் அபராதம் விதிக்கப்படும் என வெளியான தகவல்கள் குறித்து பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.இலங்கையில் மது போதையில் வாகனம் செலுத்துவோருக்கு ஐந்து லட்சம் ரூபா அபராதமோ அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையோ விதிக்கப்படும் என சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.குறிப்பாக நேற்று முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக தகவல்கள் பகிரப்பட்டிருந்தது.இந்த நிலையில், இந்த தகவல் போலியானது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.மேலும் இவ்வாறு போலியான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களின் பிரகாரம் குடிபோதையில் வாகனம் செலுத்துவொருக்கு 25000 ரூபா முதல் 30000 ரூபா வரையிலான அபராதமும் ஓட்டுனர் உரிமத்தை 2 அல்லது மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.