வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொன்கஹருப்ப, கால்வாய் வீதி பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 32 வயதான கொன்கஹருப்ப, கால்வாய் வீதியை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.
காணி ஒன்று தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக உயிரிழந்தவர் தனது இளைய சகோதரன் நடத்தும் இரவு உணவகத்திற்கு குடிபோதையில் வந்ததாகவும், வாக்குவாதம் முற்றி இளைய சகோதரன் கத்தியால் குத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கத்தி குத்தில் பலத்த காயமடைந்த நபர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சடலம் மொனராகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலையைச் செய்த 26 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடிபோதையில் வாக்குவாதம்; இளைய சகோதரன் கத்தியால் குத்தியதில் அண்ணன் பலி. samugammedia வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொன்கஹருப்ப, கால்வாய் வீதி பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் 32 வயதான கொன்கஹருப்ப, கால்வாய் வீதியை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.காணி ஒன்று தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக உயிரிழந்தவர் தனது இளைய சகோதரன் நடத்தும் இரவு உணவகத்திற்கு குடிபோதையில் வந்ததாகவும், வாக்குவாதம் முற்றி இளைய சகோதரன் கத்தியால் குத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.கத்தி குத்தில் பலத்த காயமடைந்த நபர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.சடலம் மொனராகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலையைச் செய்த 26 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.