இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மில்லியன் முட்டைகளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நேற்று (20) இரவு கொழும்பை வந்தடைந்தது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அதன் மாதிரிகளை இன்று (21) எடுக்கவுள்ளதாக அரச வர்த்தக பல்வேறு சட்டரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.
இதன்படி, இந்தியாவிலிருந்து 60 லட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.