• Oct 13 2024

இலங்கையில் நாளாந்தம் உயிரை மாய்த்துக்கொள்ளும் 08 பேர் - வைத்தியர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

Chithra / Oct 13th 2024, 8:45 am
image

Advertisement

 

இலங்கையில் நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகுவதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

சிறுவர்களின் உடல், உள நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அவர்களை உடனடியாக வைத்தியர்களிடம் அழைத்துச் செல்லுமாறு அச்சங்கத்தின் மனநல வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலகில் அதிகளவான உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகும் நாடுகளில் இலங்கை 21 ஆம் இடத்தில் இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தால் 1926 அல்லது 1333 என்ற மனநல உதவி சேவைகள் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நாளாந்தம் உயிரை மாய்த்துக்கொள்ளும் 08 பேர் - வைத்தியர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்  இலங்கையில் நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகுவதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.சிறுவர்களின் உடல், உள நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அவர்களை உடனடியாக வைத்தியர்களிடம் அழைத்துச் செல்லுமாறு அச்சங்கத்தின் மனநல வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.உலகில் அதிகளவான உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகும் நாடுகளில் இலங்கை 21 ஆம் இடத்தில் இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.எனவே, நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தால் 1926 அல்லது 1333 என்ற மனநல உதவி சேவைகள் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement