மூதுர் தள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று வியாழக்கிழமை காலை வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருந்துத் தட்டுப்பாட்டை உடன் நீக்கு, வாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை நடைமுறைப்படுத்து, அதிகரித்தை மின் கட்டணத்தை உடன் நிறுத்து உள்ளிட்ட சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.