• May 13 2024

யாழில் நாளை 3கட்டங்களாக நிகழ்வுகள்- ஜனாதிபதியுடன் இந்திய மத்திய அமைச்சரும் பங்கேற்பு!

Sharmi / Feb 10th 2023, 2:51 pm
image

Advertisement

'யாழ்ப்பாண கலாசார மையம்' கையளிப்பு, இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் என்பன நாளை சனிக்கிழமை மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இவற்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

காலை 9 மணிக்கு யாழ்ப்பாண கலாசார மையம் கையளிப்பு நடைபெறும். இந்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் கலந்துகொள்ளவுள்ளார். அவருடன் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையும் பங்கேற்கவுள்ளார்.

இதன் பின்னர் மாலை 5 மணிக்கு இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் நடைபெறும். இதன்போது வடக்கின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுதந்திர நாள் ஊர்த்திப் பவனி நடைபெறும். இறுதியாக இரவு 7 மணிக்கு முற்றவெளியில் இசை நிகழ்வு நடைபெறும்.

இந்த இரு நிகழ்வுகளும் ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

யாழில் நாளை 3கட்டங்களாக நிகழ்வுகள்- ஜனாதிபதியுடன் இந்திய மத்திய அமைச்சரும் பங்கேற்பு 'யாழ்ப்பாண கலாசார மையம்' கையளிப்பு, இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் என்பன நாளை சனிக்கிழமை மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இவற்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.காலை 9 மணிக்கு யாழ்ப்பாண கலாசார மையம் கையளிப்பு நடைபெறும். இந்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் கலந்துகொள்ளவுள்ளார். அவருடன் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையும் பங்கேற்கவுள்ளார்.இதன் பின்னர் மாலை 5 மணிக்கு இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் நடைபெறும். இதன்போது வடக்கின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுதந்திர நாள் ஊர்த்திப் பவனி நடைபெறும். இறுதியாக இரவு 7 மணிக்கு முற்றவெளியில் இசை நிகழ்வு நடைபெறும். இந்த இரு நிகழ்வுகளும் ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement