தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மூவினங்களை சேர்ந்த உத்தியோகத்தர்களும் இணைந்து விசேட விருந்துபசார நிகழ்வை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த விருந்தோம்பல் நிகழ்வானது இன்று (17)பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்றது.
இதில் தமிழ் சிங்கள இஸ்லாமிய பாரம்பரிய உணவு வகைகள் மூவின சமூகங்களை சேர்ந்த உத்தியோகத்தர்கள் இணைந்து உணவை பரிமாறிக் கொண்டனர்.