• Oct 19 2024

துப்பாக்கிச் சூட்டில் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு..! நள்ளிரவில் பயங்கரம்

Chithra / Jun 10th 2024, 8:14 am
image

Advertisement

 

ஹம்பாந்தோட்டை - ஹுங்கம திஸ்ஸ வீதி, ரன்ன பிரதேசத்தில் கட்டடப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நபர் ஹார்ட்வேயார் கடை ஒன்றை வியாபாரமாக நடத்தி வந்ததாகவும், 

நேற்று இரவு, முதல் மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு இறங்கும் போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு. நள்ளிரவில் பயங்கரம்  ஹம்பாந்தோட்டை - ஹுங்கம திஸ்ஸ வீதி, ரன்ன பிரதேசத்தில் கட்டடப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.இந்த துப்பாக்கிச் சூடு நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதே பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த நபர் ஹார்ட்வேயார் கடை ஒன்றை வியாபாரமாக நடத்தி வந்ததாகவும், நேற்று இரவு, முதல் மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு இறங்கும் போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement