ஜக்கிய மக்கள் சக்தியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி நீக்கப்படும் சாத்தியங்கள் அதிகமுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பௌசி எப்பொழுதும் அதிகாரத்தின் பக்கம் சாதகமாக இருப்பவர் என்றும் இலங்கையின் அரசியல் எவ்வாறு மாற்றும் என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியாது என்றும் முஜிபர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக ஜக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த மேலும் சிலரைக் கூட தற்போது நம்ப முடியாதுள்ளதாகவும் முஜிபர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பௌசி மீது கட்சி ஏற்கனவே ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் விரைவில் கட்சியிலிருந்து தடைசெய்யப்படலாம் எனவும் முஜிபர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொழும்பு மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக முஜிபர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் அந்த நாடாளுமன்ற பதவி பௌசிக்கு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பௌசி விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் - முஜிபர் ரஹ்மான் samugammedia ஜக்கிய மக்கள் சக்தியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி நீக்கப்படும் சாத்தியங்கள் அதிகமுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.பௌசி எப்பொழுதும் அதிகாரத்தின் பக்கம் சாதகமாக இருப்பவர் என்றும் இலங்கையின் அரசியல் எவ்வாறு மாற்றும் என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியாது என்றும் முஜிபர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.குறிப்பாக ஜக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த மேலும் சிலரைக் கூட தற்போது நம்ப முடியாதுள்ளதாகவும் முஜிபர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும், பௌசி மீது கட்சி ஏற்கனவே ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் விரைவில் கட்சியிலிருந்து தடைசெய்யப்படலாம் எனவும் முஜிபர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை கொழும்பு மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக முஜிபர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் அந்த நாடாளுமன்ற பதவி பௌசிக்கு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.