மன்னார் ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.
ஜெகனின் இலக்கிய நூல்களின் ஆய்வில் தலை மன்னார் ராமேஸ்வரம் இடையில்
கப்பல் போக்குவரத்தை விரைவுபடுத்த கோரியும் பண்டைய காலத்தில் மன்னார்
மாவட்டம் எவ்வாறு சிறப்புடன் இருந்தது என்பதை இலக்கிய நூல்கள் மூலம்
ஆய்வு செய்தும் உருவாக்கப்பட்ட காணொளி அடங்கிய இருவெட்டு இன்று
திங்கட்கிழமை (8) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் அவர்களிடம் உத்தியோக பூர்வமாக
கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,யாழ் இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா ஆகியோருக்கும் வழங்கும் வகையில் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,யாழ் இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா ஆகியோருக்கும் வழங்கும் வகையில் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.