பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மீனவர் ஒருவர் மருத்துவ குணம் கொண்ட அரிய வகை மீன்களை ஏலம் விடுவதன் மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரரானார்.
ஹைடேரி மீனவ கிராமத்தில் வசிக்கும் ஹாஜி பலோச் மற்றும் அவரது தொழிலாளர்களே குறித்த மீனை பிடித்துள்ளனர்.
இந்த மீனவர் "சோவா" எனப்படும் மீன் வகையை பிடித்து 70 மில்லியன் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மீன் குணப்படுத்தும் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டதாக கூறப்படுகிறது, மேலும் மீனின் சில பகுதிகள் அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.
சோவா மீன்கள் 1.5 மீற்றர் நீளம் வரை வளரக்கூடியதாகவும் 20 முதல் 40 கிலோகிராம் வரை எடையுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த மீனுக்கு அதிக தேவை இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.