இஸ்ரேலில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு இஸ்ரேலின் அரபு நகரில் உள்ள வீடொன்றில் மர்ம நபர்கள் குழுவொன்று புகுந்து திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, அயலவர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த இடத்துக்கு காவல்துறையினர் வந்துள்ளனர்.
அப்போது, அந்த வீட்டில் பெண் ஒருவர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு samugammedia இஸ்ரேலில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.வடக்கு இஸ்ரேலின் அரபு நகரில் உள்ள வீடொன்றில் மர்ம நபர்கள் குழுவொன்று புகுந்து திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.இதனையடுத்து, அயலவர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த இடத்துக்கு காவல்துறையினர் வந்துள்ளனர்.அப்போது, அந்த வீட்டில் பெண் ஒருவர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.