இந்திய கடலோர காவல் படையினரின் நடவடிக்கையில் இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒரு படகுடன், ஐந்து பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்து விசாரணைக்காக தமிழக கடலோர காவல் குழுமம் போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டி வந்தார்களா அல்லது வேறு ஏதும் கடத்தல் பொருள் கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.