நொச்சியாகம பிரதேசத்தில் உள்ள மானெல் ஏரியில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று (27) காலை மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் மானெல் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நொச்சியாகம ஹல்மில்லேவ பிரதேசத்தில் வசித்து வந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.