உலகின் தலைசிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவர் என்று கருதப்படும் பெலே (Pele) மருத்துவமனையில் இருந்தபடி உலகக் கிண்ணப் போட்டியில் பிரேசிலுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.
அவர் பெருங்குடல் புற்றுநோய் காரணமாக சாவ்போவ்லோ நகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.
82 வயது பெலே சீரான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை கூறுகிறது.
அவருக்குக் கடைசிக் கட்ட வலிதணிக்கும் மருத்துவம் வழங்கப்படுவதாக இதற்குமுன் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1958ஆம் ஆண்டு 17 வயதில் பெலே பிரேசிலுக்காக உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்றார்.