யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழரசு கட்சியின் கூட்டத்தின் போது, கட்சியின் உறுப்பினரும் சிவசேனையின் சிவக்காவலருமான செயமாறன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இன்று விசாரணைக்கு முன்னிலையாகியிருந்த சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழரசு கட்சியின் கூட்டத்தின் போது, கட்சியின் உறுப்பினரும் சிவசேனையின் சிவக்காவலருமான செயமாறன் மீது யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் காரியாலயத்தில் கட்சியின்கூட்டம் அண்மையில் நடைபெற்றிருந்தது.
இதன்போது தமிழரசுகட்சியின் உறுப்பினரும் சிவசேனையின் சிவக்காவலருமான செயமாறன், யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆர்னோல்டால் உனக்கு இங்கு என்னவேலை இங்கு கிறிஸ்தவ சட்டம் தான் என்று கூறி கடுமையாக தாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இதன் போது படுகாயம் அடைந்த செயமாறன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், இந்த விடயம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.