சூரிய நிறுவகத்தின் அனுசரணையில் இரண்டாம் மொழிக் கற்கையை
பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது
இன்றையதினம் யாழ்ப்பாணம்- சுதுமலையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில்
நடைபெற்றது.
முதலில் விழா மண்டபத்திற்கு விருந்தினர்கள்
அழைத்து வரப்பட்டு, மங்கள விளக்கேற்றப்பட்டு தமிழ்த் தாய் வாழ்த்துடன்
நிகழ்வுகள் ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் உரை, மாணவர்களது
கலை நிகழ்வுகள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
ஹெல்தி
லங்கா நிறுவனத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் தே.பிரேமராஜா அவர்களது
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக முன்னாள் சபாநாயகர்
கரு ஜயசூரியவும் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர்
திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன,
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்
அ.சிவபாலசுந்தரம், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வலி.தென்மேற்கு
பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அ.ஜெபநேசன், வடக்கு மாகாண சபையின்
முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.