• Sep 20 2024

பொலிஸ் சீருடையில் சிக்கிய நால்வர்!

Chithra / Feb 9th 2023, 12:50 pm
image

Advertisement

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஇம்புல பகுதியில் குற்றத்தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிட்டம்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது காருக்குள் பொலிஸ் சீருடை அணிந்த 4 பேர் இருந்துள்ளனர்.

அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்ல என்பதை உணர்ந்த பின்னர், காரும் நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு கைவிலங்குகள் மற்றும் 3 போலி இலக்கத் தகடுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 26, 27 மற்றும் 42 வயதுடைய நிட்டம்புவ, முல்லேரிய, கிந்தோட்டை மற்றும் எல்லக்கல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் இன்று (09) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச்செயல்களுக்காக பயணித்தார்களா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


பொலிஸ் சீருடையில் சிக்கிய நால்வர் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஇம்புல பகுதியில் குற்றத்தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிட்டம்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.இதன்போது காருக்குள் பொலிஸ் சீருடை அணிந்த 4 பேர் இருந்துள்ளனர்.அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்ல என்பதை உணர்ந்த பின்னர், காரும் நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு கைவிலங்குகள் மற்றும் 3 போலி இலக்கத் தகடுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 26, 27 மற்றும் 42 வயதுடைய நிட்டம்புவ, முல்லேரிய, கிந்தோட்டை மற்றும் எல்லக்கல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.சந்தேக நபர்கள் இன்று (09) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச்செயல்களுக்காக பயணித்தார்களா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement