சங்கானை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சங்கானை தெற்கு J/180 கிராமசேவையாளர் பிரிவில் 35 வயதிற்கு மேற்பட்டோர்க்கான தொற்றாநோய்களை கண்டறிவதற்கான இலவச பரிசோதனைகள் இன்றையதினம் சங்கானை மாவடி ஞானவைரவர் மணிமண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிலையில் தொற்றாநோய்களுடன் தொடர்புடைய பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த நிகழ்வில் சங்கானை பிரதேச வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், J/ 180 கிராமசேவையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த பரிசோதனையில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தமக்கான வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.