• Sep 21 2024

உள்ளுராட்சித் தேர்தலுக்கு இலவச தபால் வசதி! - வெளியான அறிவிப்பு

Chithra / Jan 17th 2023, 1:40 pm
image

Advertisement

உள்ளுராட்சித் தேர்தலுக்கு இலவச தபால் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்று நிருபம் சகல மாகாண பிரதி தபால்மா அதிபர்களுக்கும், பிரதேச தபால் அத்தியட்சகர்கள், தபால் அதிபர்கள் மற்றம் உப தபால் அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாவட்ட தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோரால் அனுப்பப்படும் கடிதங்கள், பொதிகள் மற்றும் ஆவணங்களையும், கிராம உத்தியோகத்தர்களுக்கு, மாவட்டத் தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்களுக்கு, பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளருக்கு அனுப்புவதற்காக தபால் இடப்பட்ட பொதிகளையும், கடிதங்களையும் முன்னுரிமையளித்து முதல் தபாலிலேயே அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிக்காக வேறு அரச திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்ழுவுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்காகவும் இம்முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவடைந்து ஒரு வாரம் வரை, இந்த இலவச தபால் வசதி அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சித் தேர்தலுக்கு இலவச தபால் வசதி - வெளியான அறிவிப்பு உள்ளுராட்சித் தேர்தலுக்கு இலவச தபால் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க அறிவித்துள்ளார்.இது தொடர்பான சுற்று நிருபம் சகல மாகாண பிரதி தபால்மா அதிபர்களுக்கும், பிரதேச தபால் அத்தியட்சகர்கள், தபால் அதிபர்கள் மற்றம் உப தபால் அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாவட்ட தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோரால் அனுப்பப்படும் கடிதங்கள், பொதிகள் மற்றும் ஆவணங்களையும், கிராம உத்தியோகத்தர்களுக்கு, மாவட்டத் தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்களுக்கு, பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளருக்கு அனுப்புவதற்காக தபால் இடப்பட்ட பொதிகளையும், கடிதங்களையும் முன்னுரிமையளித்து முதல் தபாலிலேயே அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் பணிக்காக வேறு அரச திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்ழுவுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்காகவும் இம்முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் முடிவடைந்து ஒரு வாரம் வரை, இந்த இலவச தபால் வசதி அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement