தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மிதிவண்டியில் தனது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
இந்நிலையில் இன்றையதினம் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்கும் பொருட்டு தனது துவிச்சக்கர வண்டியிலேயே வருகை தந்தார்.
தற்பொழுது நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமையிலால் எரிபொருளை சிக்கனப்படுத்தும் முகமாக தான் மிதிவண்டியில் பயணம் செய்வதாக கஜேந்திரன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.