தமிழ் தேசத்தின் இருப்புக்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஒருகணம் தலைசாய்த்து வணக்கம் செலுத்துவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(22) இடம்பெற்ற பாராளுமன்றஅமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மாவீரர்களை நினைவுகூர்ந்தார்.
இதேவேளை தமிழர் தாயகங்களில் நேற்றையதினம் மாவீரர் நாள் வாரம் ஆரம்பமாகியுள்ளதுடன் மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.