காசா மீதான தாக்குதல்களை சில நாட்களுக்கு நிறுத்த இஸ்ரேல் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீர்மானத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்கப்படவுள்ளனர்.
இதற்கு பதிலாக ஹமாஸால் கடத்தப்பட்ட 50 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்தத்தை 4 நாட்களுக்கு நிறுத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.