• Sep 22 2024

துனிசியாவின் புதிய பிரதமராக கமேல் மதௌரி நியமனம் – ஜனாதிபதி அறிவி்ப்பு!

Tamil nila / Aug 8th 2024, 8:13 pm
image

Advertisement

துனிசியா அதிபர் கைஸ் சையத் அந்நாட்டு பிரதமர் அகமது ஹச்சானியை எவ்வித காரணமும் தெரிவிக்காமல் பதவி நீக்கம் செய்துள்ளார். இவருக்கு பதிலாக துனிசியாவின் புதிய பிரதமராக அந்நாட்டு அமைச்சர் கமேல் மதௌரி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக துனிசியா அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி ஹச்சானி துனிசியா பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இவர் நஜிலா பௌடனை தொடர்ந்து துனிசியா பிரதமராக பதவியேற்றார். முன்னதாக நஜிலா பௌடனும், பிரதமர் பதவியில் இருந்து எவ்வித காரணமும் இன்றி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று கைஸ் சையத் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு ஆணை மூலம் ஆட்சி செய்வதாக அறிவித்தார். இதற்கு ஏற்ப அந்நாட்டு அரசியலமைப்பு 2022 ஆம் ஆண்டு மாற்றி எழுதப்பட்டது.

துனிசியாவில் அதிபருக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு குறைந்த அளவிலான அதிகாரத்தை வழங்கும் வகையில் மாற்றப்பட்டது. தற்போது பிரதமரமாக பொறுப்பேறகும் மௌதரி கடந்த மே மாதம் தான் அமைச்சரவையில் இடம்பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துனிசியாவின் புதிய பிரதமராக கமேல் மதௌரி நியமனம் – ஜனாதிபதி அறிவி்ப்பு துனிசியா அதிபர் கைஸ் சையத் அந்நாட்டு பிரதமர் அகமது ஹச்சானியை எவ்வித காரணமும் தெரிவிக்காமல் பதவி நீக்கம் செய்துள்ளார். இவருக்கு பதிலாக துனிசியாவின் புதிய பிரதமராக அந்நாட்டு அமைச்சர் கமேல் மதௌரி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக துனிசியா அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி ஹச்சானி துனிசியா பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இவர் நஜிலா பௌடனை தொடர்ந்து துனிசியா பிரதமராக பதவியேற்றார். முன்னதாக நஜிலா பௌடனும், பிரதமர் பதவியில் இருந்து எவ்வித காரணமும் இன்றி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று கைஸ் சையத் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு ஆணை மூலம் ஆட்சி செய்வதாக அறிவித்தார். இதற்கு ஏற்ப அந்நாட்டு அரசியலமைப்பு 2022 ஆம் ஆண்டு மாற்றி எழுதப்பட்டது.துனிசியாவில் அதிபருக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு குறைந்த அளவிலான அதிகாரத்தை வழங்கும் வகையில் மாற்றப்பட்டது. தற்போது பிரதமரமாக பொறுப்பேறகும் மௌதரி கடந்த மே மாதம் தான் அமைச்சரவையில் இடம்பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement