பூநகரி பகுதியிலுள்ள பஸ் நிறுத்தும் இடம் ஒன்றில் நின்றிருந்த பெண் ஒருவரை காரில் வந்த மூவர் கடத்திச் சென்று அவரிடமிருந்த தங்க நகைகளைக்க கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணிடமிருந்து 7,45,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பெண்ணை கடத்திச் சென்று அவரது தங்க நகைகளைக் கொள்ளையிட்ட மூவர் குறித்த இதுவரை தகவல் இல்லை டினவும் அந்தப் பொலிஸ் அதிகாரி கூறினார்.