• May 19 2024

இலங்கைக்கு விஜயம் செய்த ஜெர்மனிய பிரஜை பரிதாபமாக உயிரிழப்பு...! samugammedia

Sharmi / Nov 9th 2023, 12:13 pm
image

Advertisement

நீரில் மூழ்கி ஜெர்மனிய பிரஜையொருவர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

தங்காலை சீனிமோதர பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற ஜெர்மனிய பிரஜை  ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடற்கரையில் இருந்தவர்களால் குறித்த பிரஜை மீட்கப்பட்டு தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 49 வயதான ஜெர்மனிய பிரஜை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு விஜயம் செய்த ஜெர்மனிய பிரஜை பரிதாபமாக உயிரிழப்பு. samugammedia நீரில் மூழ்கி ஜெர்மனிய பிரஜையொருவர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுதங்காலை சீனிமோதர பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற ஜெர்மனிய பிரஜை  ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் கடற்கரையில் இருந்தவர்களால் குறித்த பிரஜை மீட்கப்பட்டு தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 49 வயதான ஜெர்மனிய பிரஜை என தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement