• Sep 21 2024

ஆற்றில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு! samugammedia

Tamil nila / May 18th 2023, 1:40 pm
image

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த எடையாத்தூர் பகுதியில் வசித்து வரும் புஷ்பா என்பவரது 11 வயது மகள் தீபிகா, இன்று எடையத்தூர் பாலாற்றில் துணி துவைக்க சென்ற போது தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரது சொந்த ஊரான கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தில் தனது கணவருடன் வசித்து வந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் இறந்துள்ளார்.

அதனால் கடந்த பத்து ஆண்டுகளாக புஷ்பா தனது தாய் வீடான எடையாதூர் கிராமத்தில் தங்கி தனது 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

குடும்ப வறுமை காரணமாக பிள்ளைகளை பள்ளி படிப்பில் இருந்து பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி வேலை செய்து வரும் நிலையில், தனது மகள் இறந்த சோகத்தில் தாய் கண்ணீர் விட்டு அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடலை கைப்பற்றிய திருக்கழுக்குன்றம் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்றில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு samugammedia செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த எடையாத்தூர் பகுதியில் வசித்து வரும் புஷ்பா என்பவரது 11 வயது மகள் தீபிகா, இன்று எடையத்தூர் பாலாற்றில் துணி துவைக்க சென்ற போது தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவரது சொந்த ஊரான கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தில் தனது கணவருடன் வசித்து வந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் இறந்துள்ளார்.அதனால் கடந்த பத்து ஆண்டுகளாக புஷ்பா தனது தாய் வீடான எடையாதூர் கிராமத்தில் தங்கி தனது 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.குடும்ப வறுமை காரணமாக பிள்ளைகளை பள்ளி படிப்பில் இருந்து பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி வேலை செய்து வரும் நிலையில், தனது மகள் இறந்த சோகத்தில் தாய் கண்ணீர் விட்டு அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உடலை கைப்பற்றிய திருக்கழுக்குன்றம் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement