• May 03 2024

இரண்டு மாதத்தில் அடுத்தடுத்து அதிஷ்டம்; தலைகீழான பெண்ணின் வாழ்க்கை!

Chithra / Jan 12th 2023, 12:07 pm
image

Advertisement

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள ஷெல்பி என்னும் பகுதியை சேர்ந்த கென்யா சோலன் என்ற பெண்ணுக்கு இரண்டு மாதத்தில் அடுத்தடுத்து லொட்டரியில் பணப்பரிசு கிடைத்ததால் அவர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.

இந்த பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக முதலாவது லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். இதில் அவருக்கு ஒரு மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய்) பரிசு விழுந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்து போயிருந்தார் கென்யா சோலன்.

மேலும் இந்த பணத்தை கொண்டு சொந்தமாக அவர் வீடு கட்டவும் தொடங்கியுள்ளார். இதற்கடுத்து சுமார் ஒரு மாதம் கழித்து மீண்டும் லொட்டரி டிக்கெட் ஒன்றை கென்யா வாங்கி உள்ளார்.

இந்த நிலையில், மீண்டும் கென்யா சோலன் வாங்கிய லொட்டரிக்கு பரிசு கிடைத்துள்ளது. அதிலும் ஒரு மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ளது.

இப்படியாக சுமார் 2 மாத இடைவெளியில், இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாய் வரை பரிசு விழுந்துள்ளதால், தலை கால் புரியாமல் திக்கு முக்காடி போயுள்ளார் கென்யா சோலன்.

முந்தைய பரிசு பணத்தில் வீடு கட்டி வரும் கென்யா சோலன், தற்போது கிடைத்துள்ள பணத்தை கொண்டு உணவகம் ஒன்றை திறந்து தனது கனவை நிறைவேற்ற போவதாகவும் முடிவு செய்துள்ளார்.

பலருக்கும் லொட்டரியில் ஒரு முறை பரிசு கிடைப்பதே அரிதாக பார்க்கப்படும் நிலையில், இவருக்கு இரண்டு மாத இடைவெளியில் இரண்டு முறை பெருந்தொகை லொட்டரி மூலம் பரிசாக விழுந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. 

இரண்டு மாதத்தில் அடுத்தடுத்து அதிஷ்டம்; தலைகீழான பெண்ணின் வாழ்க்கை அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள ஷெல்பி என்னும் பகுதியை சேர்ந்த கென்யா சோலன் என்ற பெண்ணுக்கு இரண்டு மாதத்தில் அடுத்தடுத்து லொட்டரியில் பணப்பரிசு கிடைத்ததால் அவர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.இந்த பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக முதலாவது லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். இதில் அவருக்கு ஒரு மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய்) பரிசு விழுந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்து போயிருந்தார் கென்யா சோலன்.மேலும் இந்த பணத்தை கொண்டு சொந்தமாக அவர் வீடு கட்டவும் தொடங்கியுள்ளார். இதற்கடுத்து சுமார் ஒரு மாதம் கழித்து மீண்டும் லொட்டரி டிக்கெட் ஒன்றை கென்யா வாங்கி உள்ளார்.இந்த நிலையில், மீண்டும் கென்யா சோலன் வாங்கிய லொட்டரிக்கு பரிசு கிடைத்துள்ளது. அதிலும் ஒரு மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ளது.இப்படியாக சுமார் 2 மாத இடைவெளியில், இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாய் வரை பரிசு விழுந்துள்ளதால், தலை கால் புரியாமல் திக்கு முக்காடி போயுள்ளார் கென்யா சோலன்.முந்தைய பரிசு பணத்தில் வீடு கட்டி வரும் கென்யா சோலன், தற்போது கிடைத்துள்ள பணத்தை கொண்டு உணவகம் ஒன்றை திறந்து தனது கனவை நிறைவேற்ற போவதாகவும் முடிவு செய்துள்ளார்.பலருக்கும் லொட்டரியில் ஒரு முறை பரிசு கிடைப்பதே அரிதாக பார்க்கப்படும் நிலையில், இவருக்கு இரண்டு மாத இடைவெளியில் இரண்டு முறை பெருந்தொகை லொட்டரி மூலம் பரிசாக விழுந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement