• May 13 2024

புதிய கட்சி ஊடாக மீண்டும் அரசியலில் களமிறங்கவுள்ள கோட்டாபய...? வெளியான தகவல்

Chithra / Sep 12th 2023, 10:32 am
image

Advertisement

 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியில் இருந்து விலகியதில் இருந்து மௌனம் காத்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் அரசியலுக்கு பிரவேசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் கட்சியொன்றின் மூலம் தோல்வியடைந்த தனது பிம்பத்தை மீண்டும் கைப்பற்ற கோட்டாபய ராஜபக்ஷ முனைந்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் தனது நெருங்கிய உதவியாளரான திலித் ஜயவீரவினால் பதிவு செய்யப்பட்ட மவ்பிம ஜனதா கட்சிக்கு கோட்டபாய ராஜபக்ஷ ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜயவீர கட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் மவ்பிம ஜனதா கட்சி தனது அரசியலமைப்பை மாற்றியமைத்து புதிய நிர்வாகிகளை தெரிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆசிர்வாதங்களை வழங்கி மவ்பிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிப்பார் என அறியப்படுகிறது.


புதிய கட்சி ஊடாக மீண்டும் அரசியலில் களமிறங்கவுள்ள கோட்டாபய. வெளியான தகவல்  கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியில் இருந்து விலகியதில் இருந்து மௌனம் காத்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் அரசியலுக்கு பிரவேசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய அரசியல் கட்சியொன்றின் மூலம் தோல்வியடைந்த தனது பிம்பத்தை மீண்டும் கைப்பற்ற கோட்டாபய ராஜபக்ஷ முனைந்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அண்மையில் தனது நெருங்கிய உதவியாளரான திலித் ஜயவீரவினால் பதிவு செய்யப்பட்ட மவ்பிம ஜனதா கட்சிக்கு கோட்டபாய ராஜபக்ஷ ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.ஜயவீர கட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் மவ்பிம ஜனதா கட்சி தனது அரசியலமைப்பை மாற்றியமைத்து புதிய நிர்வாகிகளை தெரிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆசிர்வாதங்களை வழங்கி மவ்பிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிப்பார் என அறியப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement