கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துப்பாக்கி தோட்டாவொன்று மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விமான நிலைய பொலிஸார், விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விமான நிலையத்தின் போக்குவரத்து பகுதியில் அமைந்துள்ள ஆண்களுக்கான கழிவறையில் இருந்து நேற்று (25) அதிகாலை குறித்த தோட்டா மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.