• Oct 18 2024

அடை மழை - வெள்ளத்தில் மிதக்கும் பாடசாலை! பெரும் சிரமத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் samugammedia

Chithra / Nov 28th 2023, 1:40 pm
image

Advertisement

 

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட  அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, அக்கரைப்பற்று,  நிந்தவூர், நாவிதன்வெளி, சம்மாந்துறை, பிரதேச   பகுதிகளில் தற்போது பெய்து வரும் அடை  மழை  காரணமாக வெள்ளம் தேங்கியுள்ளதுடன் அங்கு வாழும் மக்கள் பெரும்  சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த மழை வெள்ளத்தின் காரணமாக இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை,  பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை,  அக்கரைப்பற்று,  பகுதிகளில்  இப்பிரதேசத்தில் பல  குடும்பங்கள் வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதுடன் தற்போது அங்குள்ள மக்கள்  வீடுகளிற்குள் மழை வெள்ளம் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அரச தனியார் நிறுவனங்கள் கூட வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதற்கு காரணம் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.


அடை மழை - வெள்ளத்தில் மிதக்கும் பாடசாலை பெரும் சிரமத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் samugammedia  அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட  அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, அக்கரைப்பற்று,  நிந்தவூர், நாவிதன்வெளி, சம்மாந்துறை, பிரதேச   பகுதிகளில் தற்போது பெய்து வரும் அடை  மழை  காரணமாக வெள்ளம் தேங்கியுள்ளதுடன் அங்கு வாழும் மக்கள் பெரும்  சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இந்த மழை வெள்ளத்தின் காரணமாக இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை,  பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை,  அக்கரைப்பற்று,  பகுதிகளில்  இப்பிரதேசத்தில் பல  குடும்பங்கள் வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதுடன் தற்போது அங்குள்ள மக்கள்  வீடுகளிற்குள் மழை வெள்ளம் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.அத்துடன் அரச தனியார் நிறுவனங்கள் கூட வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement