கபரன பகுதியில் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் திருகோணமலை - கிண்ணியா பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிண்ணியாவிலிருந்து கொழும்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதிலே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் கிண்ணியாவைச் சேர்ந்த எம்.ஐ.இஸாம் (43) உயிரிழந்துள்ளதுடன் அவருடன் பயணித்த எஸ்.எம்.முகம்மது றியாஸ் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கபரண பொலாஸார் முன்னெடுத்துள்ளனர்.