கம்பளை அல்பிட்டிய பிரதேசத்தில் கடந்த 6 நாட்களாக காணாமல் போயிருந்த யுவதியின் சடலம் இன்று காலை அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதைக்கப்பட்டிருந்த சடலம் தற்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கம்பளையில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்த 22 வயதுடைய யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பணியிடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது காணாமல் போயிருந்தார்.
விசாரணைகளை ஆரம்பித்திருந்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபரை கைது செய்தனர்.
ஆடு மேய்க்கும் நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
யுவதியை துஷ்பிரயோகம் செய்ய தான் முயன்றதாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், யுவதியை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொன்று புதைத்ததாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் அடிப்படையில் பாத்திமா புதைக்கப்பட்ட இடத்தை நேற்று (12) அடையாளம் கண்ட பொலிஸார், இன்று காலை சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அவரது சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர்.
யுவதி மறுத்ததால் கொன்று புதைத்தேன்- ஆடு மேய்க்கும் நபர் வாக்குமூலம். samugammedia கம்பளை அல்பிட்டிய பிரதேசத்தில் கடந்த 6 நாட்களாக காணாமல் போயிருந்த யுவதியின் சடலம் இன்று காலை அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதைக்கப்பட்டிருந்த சடலம் தற்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.கம்பளையில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்த 22 வயதுடைய யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பணியிடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது காணாமல் போயிருந்தார்.விசாரணைகளை ஆரம்பித்திருந்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபரை கைது செய்தனர்.ஆடு மேய்க்கும் நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.யுவதியை துஷ்பிரயோகம் செய்ய தான் முயன்றதாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், யுவதியை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொன்று புதைத்ததாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.அந்த தகவலின் அடிப்படையில் பாத்திமா புதைக்கப்பட்ட இடத்தை நேற்று (12) அடையாளம் கண்ட பொலிஸார், இன்று காலை சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அவரது சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர்.