'பேச விரும்பினால் மட்டும் என்னுடன் பேசுங்கள். இல்லையேல் நீங்கள் எழுந்து செல்லலாம்', என்று இரா. சம்பந்தன் எம். பியிடம் நேற்றைய சந்திப்பில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார் .
தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் சந்திப்பில் ஈடுபட்டவேளை 'எங்களை தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள். அதிகாரப் பகிர்வு குறித்து முதலில் எங்களுடன் பேசுங்கள்...' என்று சம்பந்தன் தனது சீற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சம்பந்தன் கடும் தொனியில் கூறிய இந்த வார்த்தைகளால் சினமுற்ற ஜனாதிபதி 'பேச விரும்பினால் மட்டும் என்னுடன் பேசுங்கள். இல்லையேல் நீங்கள் எழுந்து செல்லலாம்', என்று கூறினார்.
தொடர்ந்து, 'என்னால் தரக்கூடியவற்றையே தர முடியும். 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதானால் பாராளுமன்றில் 3இல் 2 பெரும்பான்மை அவசியம். அதனை செய்ய எம்மால் முடியாது' என்றும் அவர் கோபமாகவே பதிலளித்தார்.