கல்முனை தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களின் ஒன்று
கூடலும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை(16) மாலை
இடம்பெற்றது.
முன்னாள் கல்முனை மாநகர சபை
உறுப்பினர் ஏ.எச்.எச்.எம் நபாரின் அலுவலகத்தில் குறித்த நிகழ்வு
நடைபெற்றதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் முஸ்லீம் பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்.
கட்சியின்
தலைவரான ரணில் விக்கிரமசிங்க ஆலோசனையில் பிராந்தியத்தில் கட்சியை
பலப்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் தற்போது ஐக்கிய தேசிய கட்சியில்
தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் கட்சிக்கான ஆதரவு கோரும் நடவடிக்கைகள் தொடர்பில்
விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.